முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்மையை போற்றி பாதுகாப்போம்.

எல்லையற்ற ஆற்றலுள்ள
இறைவன்திரு வுள்ளமென்ன?
எவ்வுயிரும் தோன்றுதற்கு
ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பொண்ணினத்தை
வடிவமைத்தான் அற்புதமே.
வாழ்ந்துவரும் மக்களில்இவ்
வளமறிந்தோர் எத்தனைபேர்?
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆதங்கம் இது.பெண்களும் ஆண்களும் கூடி வாழும் ஒரு கூட்டு சமுதாயமே இந்த உலகம். இரு பாலாரும் ஒருவரின்றி ஒருவர் வாழ்வில் இனிமை பெறவோ, முழுமை பெறவோ முடியாது. இவ்வாறு மனித வாழ்வில் ஆண், பெண் உறவு மதிப்புடையதாக இருந்தும், பெண்கள் அரசியல், பொருளாதாரம், மதம் போன்ற துறைகளில் ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களையும் பெற்றெடுத்தவர்கள் பெண்மணிகள்தானே ? இவ்வளவு பேர் உடலிலும் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்திற்கும் பெண் மக்களுடைய இரத்தம்தானே மூலதனம் ? இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் படைத்த இறைவன் உயிரினத்தின் படைப்பைப் பெண்களிடம் ஒப்படைத்துள்ளான் என்பதை எண்ணி அவர்களை மதிக்க வேண்டாமா ? எனவே ஒவ்வொருவரும் மனதில் சங்கல்பம் செய்து கொள்ளுங்கள், அரசியல், பொருளாதாரம், மதம் போன்ற எல்லா துறைகளிலும் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன், இவ்வாறாக தாய்க்குலத்திற்கு என் நன்றிக் கடனைச் செலுத்துவேன் என்று.
அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
மகரிஷி அவர்களின் கருத்தை படிக்கும் போது இது குறித்து ஒரு பதிவு போட வேண்டும் என்று தோன்றிற்று. இப்போதெல்லாம் பத்திரிக்கைகளைப் படிக்கும் போது கொடூரமான முறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் காண்கிறோம். ஆண், பெண் உறவு பற்றிய தவறான கருத்துக்களை அடிப்படையிலிருந்தே மனதில் பதிய வைப்பதுதான் இதற்குக் காரணம். நம் முன்னோர்களான ரிஷிகள், சித்தர்கள், ராஜாக்கள், ஏன் தெய்வங்களே கூட தங்களுடைய பத்தினிகளை எவ்வளவு கௌரவமாக நடத்தினார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சிவன் தன் உடலில் பாதியாகவும், விஷ்ணு தன் மார்பிலும், பிரம்மா தன் நாவிலும் வைத்து அவர்களுக்கு சம உரிமை வழங்கியிருக்கிறார்கள் என்பதை புராணங்கள் வாயிலாக நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம்.
என்றாலும் நடைமுறை என்று வரும் போது அவர்கள் புறக்கணிக்கப் படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும், வெறும் போகப் பொருளாகவே கருதும் ஒரு கீழ்த்தரமான பழக்கமும் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களைக் கொடுமைப்படுத்தும் சமூகம் அழிந்து போகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒரு சோம்பேரியைப் பார்த்தால் நாம் என்ன சொல்வோம் ? அவனுக்கு சக்தி இல்லை, அதனால்தான் அவன் சிவனே என்று உட்கார்ந்திருக்கிறான் என்றுதானே சொல்வோம். இவ்வளவு ஏன், புண்ணிய நதிகளுக்கு, இந்த மொத்த பூமிக்கு, நம் பாரத தேசத்தைக் கூட பெண்ணாகத்தானே உருவகப் படுத்தி இருக்கிறார்கள். இயற்கையின் படைப்பில் கூட ஆணை விடப் பெண்களுக்கு கூடுதலான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக நம் உடலில் உள்ள எலும்புகளில் ஆணைவிட பெண்ணுக்கு ஒரு எலும்பு அதிகம். பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தாயின் கருவில் பத்து நாட்கள் கூடுதலாக இருந்துதான் வெளியே வரும். நம் சுவாசத்தில் கூட சூரிய கலை(ஆண்) எட்டு அங்குலம் ஓடும், சந்திர கலை (பெண்)16 அங்குலம் ஓடும் . சூரிய கலையில் தாம்பத்யம் கொண்டால் வெளிவரும் உயிரணுக்களை விட சந்திரகலையில் அதிக உயிரணுக்கள் வெளி வரும். அதைப்போல தத்துவங்கள் 96ல் உட்கருவின் தத்துவங்கள் 36ம் சிவனின் கூறுகள். புறக்கருவின் தத்துவங்கள் 60ம் சக்தியின் கூறுகள். பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு ஜாதிகள் உண்டு. ஆனால் ஆண்களுக்கோ மான், பட்சி, அஸ்வ என்ற மூன்று ஜாதியே உண்டு. தமிழ் எழுத்துக்களில் உயிர் எழுத்து 12ம் ஆண் எழுத்துக்கள். மற்ற 217 எழுத்துக்களும் பெண் எழுத்துக்கள். ஜோதிடத்தில் சக்திக்குரிய யோகங்கள் எட்டு, சிவனுக்குரிய யோகங்கள் மூன்று. நட்சத்திரங்களில் ஆண் நட்சத்திரங்களை விட பெண் நட்சத்திரங்களே அதிகம். எல்லாவற்றிற்கும் மேலாக சகிப்புத் தன்மை ஆணைவிட பெண்ணுக்கே அதிகம். பிறந்த குழந்தை கூட முதலில் அம்மா என்றுதான் சொல்லுமே அன்றி அப்பா என்று சொல்லாது. சிசுவுக்கே தெரிகிறது பெண்மைதான் உயர்ந்தது என்று. எனவே பெண்மையின் மகிமையை உணர்ந்து, பெண்மையை போற்றி பாதுகாப்போம்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

KODUMAI

இந்த நிழற்படம் ஆபிரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லை. முல்லை பெரியார் அணை கட்டபடுவத ர்க்கு முன்பு நம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது. முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது. அதன் காரணமாக இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்கு உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர் .ஒப்பந்த அடிப்படையில் .பர்மா ,மலேசியா,மொரீசியஸ் மக்கள் அங்கு அனுப்பப்பட்டனர் .இன்னும் நம் மக்கள்அங்கு வாழ்வது குறிப்படத்தக்கத ு . இத்தகைய பஞ்சத்தை பார்த்து மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல் தான் பென்னி குயிக் என்பவர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூட தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார். —
velloreil karum poogaimandalam