எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன்திரு வுள்ளமென்ன? எவ்வுயிரும் தோன்றுதற்கு ஏற்றதொரு திருவழியாய் வல்லமையாய்ப் பொண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே. வாழ்ந்துவரும் மக்களில்இவ் வளமறிந்தோர் எத்தனைபேர்? அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆதங்கம் இது.பெண்களும் ஆண்களும் கூடி வாழும் ஒரு கூட்டு சமுதாயமே இந்த உலகம். இரு பாலாரும் ஒருவரின்றி ஒருவர் வாழ்வில் இனிமை பெறவோ, முழுமை பெறவோ முடியாது. இவ்வாறு மனித வாழ்வில் ஆண், பெண் உறவு மதிப்புடையதாக இருந்தும், பெண்கள் அரசியல், பொருளாதாரம், மதம் போன்ற துறைகளில் ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களையும் பெற்றெடுத்தவர்கள் பெண்மணிகள்தானே ? இவ்வளவு பேர் உடலிலும் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்திற்கும் பெண் மக்களுடைய இரத்தம்தானே மூலதனம் ? இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் படைத்த இறைவன் உயிரினத்தின் படைப்பைப் பெண்களிடம் ஒப்படைத்துள்ளான் என்பதை எண்ணி அவர்களை மதிக்க வேண்டாமா ? எனவே ஒவ்வொருவரும் மனதில் சங்கல்பம் செய்து கொள்ளுங்கள், அரசியல், பொருளாதாரம், மதம் போன்ற எல்லா துறைகளிலும் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கப் பாடுபடுவே
இந்த நிழற்படம் ஆபிரிக்காவில் எடுக்கப்பட்டது இல்லை. முல்லை பெரியார் அணை கட்டபடுவத ர்க்கு முன்பு நம் தமிழ் நாட்டில் எடுக்கப்பட்டது. முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டது. அதன் காரணமாக இருக்கும் மக்களுக்கு உணவளிக்க முடியாததால் பல்வேறு நாடுகளுக்கு உணவுக்காக மக்கள் அனுப்பப்பட்டனர் .ஒப்பந்த அடிப்படையில் .பர்மா ,மலேசியா,மொரீசியஸ் மக்கள் அங்கு அனுப்பப்பட்டனர் .இன்னும் நம் மக்கள்அங்கு வாழ்வது குறிப்படத்தக்கத ு . இத்தகைய பஞ்சத்தை பார்த்து மக்கள் மடிவதை பார்க்க சகிக்காமல் தான் பென்னி குயிக் என்பவர் அரசாங்கம் நிதி உதவி செய்ய முன்வராத போது கூட தன் சொத்தை எல்லாம் விற்று முல்லை பெரியார் அணையை கட்டினார். —